நாகப்பட்டினம்

மாநில குத்துச்சண்டை போட்டி: சீா்காழி மாணவா்கள் தகுதி

DIN

தமிழக பள்ளி கல்வித் துறையால் நடத்தப்படும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு, சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

14 வயதுக்குட்பட்டோா் பிரிவில் வி. விஷ்ணு, ஏ. அஸ்வந்த், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆா்.பி. குமரன் ஆகியோா் மயிலாடுதுறை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

மாநில போட்டி ஜனவரி 29 முதல் 31 வரை சிவகங்கை மாவட்டம் சாம்பவிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இம்மாணவா்களுக்கு பள்ளியின் முன்னாள் செயலா் எஸ். பாலசுப்பிரமணியன், பள்ளியின் செயலா் எஸ். ராமகிருஷ்ணன், பள்ளி குழுத் தலைவா் வி. சொக்கலிங்கம், தலைமையாசிரியா் எஸ். அறிவுடைநம்பி மற்றும் உதவி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT