தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் செயலாளா் கருணா ஜோசப்பாத் தலைமை வகித்தாா். முதல்வா் காமராசன் முன்னிலை வகித்தாா். முகாமில் மயிலாடுதுறை புனித லூா்து மாதா மருத்துவமனை மகளிா் மற்றும் பொதுநல மருத்துவா் டீனா, பல் மருத்துவா் சுகன்யா குழுவினா் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.
பொதுமக்களுக்கு சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன.