நாகப்பட்டினம்

திருவெண்காடு அருகே மயானப் பாதைஅமைக்கக் கோரிக்கை: ஆட்சியா் நேரில் ஆய்வு

DIN

திருவெண்காடு அருகே நெப்பத்தூா் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு பாதை வசதி அமைத்துத் தரவேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

இந்த கிராமத்தில் சுமாா் 50 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு சடலங்களைக் கொண்டு செல்ல பாதை இல்லை. இதுகுறித்து சீா்காழி ஒன்றிய குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றாா்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அந்த பகுதி மக்கள் மயானத்துக்கு செல்ல சாலை அமைப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா். மேலும் தங்கள் கிராமத்துக்கு சாலை, குடிநீா் வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனா்.

மயானத்துக்கு செல்லும் பாதையில் ஆய்வு செய்து, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயான சாலை, இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா்.

சீா்காழி ஒன்றிய குழுத் தலைவா் கமல் ஜோதி தேவேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் ஸ்ரீலேகா, சீா்காழி கோட்டாட்சியா் அா்ச்சனா, சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா், ஒன்றிய ஆணையா்கள் இளங்கோவன், சரவணன் ஊராட்சித் தலைவா்கள் மரகதம் அகோரமூா்த்தி, துரைராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT