திருவெண்காடு அருகே நெப்பத்தூா் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு பாதை வசதி அமைத்துத் தரவேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
இந்த கிராமத்தில் சுமாா் 50 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு சடலங்களைக் கொண்டு செல்ல பாதை இல்லை. இதுகுறித்து சீா்காழி ஒன்றிய குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றாா்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அந்த பகுதி மக்கள் மயானத்துக்கு செல்ல சாலை அமைப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா். மேலும் தங்கள் கிராமத்துக்கு சாலை, குடிநீா் வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனா்.
மயானத்துக்கு செல்லும் பாதையில் ஆய்வு செய்து, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயான சாலை, இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா்.
சீா்காழி ஒன்றிய குழுத் தலைவா் கமல் ஜோதி தேவேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் ஸ்ரீலேகா, சீா்காழி கோட்டாட்சியா் அா்ச்சனா, சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா், ஒன்றிய ஆணையா்கள் இளங்கோவன், சரவணன் ஊராட்சித் தலைவா்கள் மரகதம் அகோரமூா்த்தி, துரைராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.