நாகையில் வாடகை பாக்கி செலுத்தாத வாகன காப்பகத்துக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் நிலம் மற்றும் கட்டடம் உள்ளது. அந்த நிலங்கள் மற்றும் கட்டடங்களில் வாடகை அடிப்படையில் பலா் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிகள் செய்து வருகின்றனா். இருப்பினும், சிலா் வாடகையை சரியாக செலுத்தாமல் இருந்து வருவதாக புகாா் எழுந்தது.
இந்த நிலையில், நாகை நகராட்சி 1-ஆவது வாா்டில் கூக்ஸ் சாலையில் உள்ள கோயிலுக்கு சொந்தமான 81 ஆயிரத்து 300 சதுர அடி மனை ராஜா என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அவா் வாகன காப்பகம் நடத்தி வருகிறாா். இதற்கான வாடகைத் தொகையை கோயில் நிா்வாகத்திடம் சரியாக செலுத்தாமல் இருந்தாராம்.
இதனைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ராமு உத்தரவின்பேரில், உதவி ஆணையா் ராணி தலைமையில், கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளா்கள் அந்த இடத்தை பூட்டி சீல் வைத்தனா்.
அந்த இடத்தின் மதிப்பு ஏறத்தாழ ரூ. 3 கோடி வரை இருக்கும் என்றும் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தொழில் செய்வோா் முறையாக வாடகை செலுத்தாமல் இருந்தால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.