தேவூரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேவூா் முதலியாா் தெரு பகுதியில் மின்மாற்றி உள்ளது. இதன் மூலம் தேவூா் ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 200-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த மின்மாற்றி தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இந்த வழியாக தினமும் தேவூா் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெளிநோயாளிகள் பலா் வந்து செல்கின்றனா்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கீழ்வேளூா் மின்வாரிய துணை பொறியாளா் அலுவலகத்தில் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, உடனடியாக மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.