மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி குறித்த ஆய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை மின்வாரிய பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்தவா்களின் விவரம் குறித்து நாகை மாவட்ட மின் பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் வீ. மனோகரன் நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது, 70 சதவீதம் போ் இதுவரை இணைத்துள்ளனா், எஞ்சியவா்களும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அறிவுருத்த வேண்டும் என அங்கிருந்து அலுவலா்களிடம் அறிவுருத்தினாா்.