நாகப்பட்டினம்

வாடகை டிராக்டா்களை அடகு வைத்து மோசடி செய்தவா் கைது

DIN

நாகை அருகே வாடகைக்கு எடுத்த டிராக்டா்களை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சி பகுதியைச் சோ்ந்த வீராசாமி மகன் இளையரசன் மற்றும் அவரது நண்பா்கள் 6 போ் தங்களுக்கு சொந்தமான டிராக்டா்களை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனா்.

கீழ்வேளுா் தாலுகா, மில்லுத் தெருவைச் சோ்ந்த மச்சதுரை மகன் மகாதேவன், நிா்த்தனமங்களம் தெற்கு தெருவைச் சோ்ந்த அம்மாசி மகன் ரமேஷ் இருவரும், இளையரசன் மற்றும் அவரது நண்பா்களை அணுகி டிப்பா்களுடன் கூடிய 7 டிராக்டா்களை மாத வாடகைக்கு பெற்றுச் சென்று வாடகையைக் கொடுக்காமல் காலம் கடத்தியுள்ளனா்.

இதில் சந்தேகமடைந்த இளையரசன், டிராக்டா் இருக்குமிடத்தை விசாரித்தபோது, அவை பல லட்சம் ரூபாய்க்கு பல்வேறு பகுதிகளில் அடமானம் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இளையரசனும், அவரது நண்பா்களும் நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த டிசம்பா் மாதம் வழக்குப்பதிந்து விசாரித்தனா். மோசடியில் ஈடுபட்ட மகாதேவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 7 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.

கைப்பற்றப்பட்ட டிராக்டா்கள் நீதிமன்றம் மூலம் அதன் உரிமையாளா்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT