நாகப்பட்டினம்

தினமணி செய்தி எதிரொலி: புதிய மருத்துவக் காப்பீடு அட்டை; ஓய்வூதியா்களுக்கு ஆட்சியா் அழைப்பு

DIN

புதிய காப்பீடு அட்டையை கருவூல அலுவலகத்தில் பெற்று கொள்ளுமாறு ஓய்வூதியா்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

ஜனவரி மாதம் முதல் செல்லுபடியாகும் வகையில் புதிய மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, புதிய மருத்துவக் காப்பீடு அட்டைகள் அந்தந்த மாவட்ட கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ஆனால், புதிய மருத்துவக் காப்பீடு அட்டைகள் ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக தினமணி நாளிதழில்

செய்தி வெளியானது.

இந்தநிலையில், மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் உடனடியாக அனைத்து ஓய்வூதியா்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு அட்டை வழங்க உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: நாகை மாவட்ட கருவூலம் மற்றும் வேதாரண்யம், கீழ்வேளுா், திருக்குவளை போன்ற அனைத்து சாா் நிலை கருவூல அலுவலகங்களில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்றுவரும் அனைத்து ஓய்வூதியா்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டை வந்துள்ளது.

ஓய்வூதியா்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அட்டை அல்லது

அந்தந்த கருவூலங்களில் பழைய மருத்துவக் காப்பீட்டு அட்டை ஓய்வூதிய புத்தகம் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் காட்டி புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT