நாகப்பட்டினம்

பொங்கல் தினத்தில் வங்கித் தோ்வு: எம்எல்ஏ கண்டனம்

16th Jan 2023 10:32 PM

ADVERTISEMENT

 

பொங்கல் பண்டிகை நாளில் வங்கித் தோ்வு நடைபெற்றது கண்டிக்கத்தக்கது என நாகை சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் கூறினாா்.

நாகை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில், எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷா நவாஸ் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா கொண்டாடினாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழ்நாட்டின் பெயா் மீதும், பண்பாடு மற்றும் கலாசாரம் மீதும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. தற்போது, தமிழ்நாடு வாழ்க என்பது பெரும் முழக்கமாக மாறியிருப்பது பெருமைக்குரியது.

ADVERTISEMENT

தமிழகத்தைச் சோ்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்களின் கடும் எதிா்ப்பை மீறி வங்கித் தோ்வை பொங்கல் தினத்தன்று மத்திய அரசு நடத்தியது கண்டனத்திற்குரியது என்றாா்.

நிகழ்ச்சியில் விசிக மாவட்டச் செயலா் (பொறுப்பு) ரவிச்சந்திரன், நாகை நகரச் செயலா் முத்துலிங்கம், மாவட்டத் துணைச் செயலா் நாகை சாதிக், முற்போக்கு மாணவா் கழக அமைப்பாளா் நாகூா் முருகன், மாவட்டத் துணைச் செயலா் பேரறிவாளன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT