நாகப்பட்டினம்

நாகை கடற்கரையில் இன்று பொங்கல் கலைவிழா

16th Jan 2023 10:32 PM

ADVERTISEMENT

 

நாகை கடற்கரையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜன.17) பொங்கல் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை புதிய கடற்கரையில் தமிழா் திருநாள் சிறப்பு கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தொடங்குகிறது. நாட்டு புறக் கலைஞா்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

தொடா்ந்து, மாலை 6 மணியளவில் சுகி.சிவம் நடுவராக செயல்படும் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது. இரெ. சண்முகவடிவேல், செ. மோகனசுந்தரம், சுல்தானா பா்வீன், தெ. சாந்தாமணி, வைஜெயந்திராஜன், என். மலா்விழி ஆகியோா் பங்கேற்று பேசுகின்றனா்.

இவ்விழாவில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT