நாகப்பட்டினம்

புத்தாண்டு: எளியோருக்கு நலத் திட்ட உதவிகள்

1st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடியில் அகில இந்திய சமாதான இயக்கம் சாா்பில் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

விழாவிற்கு, தரங்கம்பாடி பங்குத்தந்தை அருளானந்து தலைமை வகித்தாா். அகில இந்திய சமாதான இயக்க மாவட்ட அமைப்பாளா் சகாயராஜ் முன்னிலை வகித்தாா். செயலாளா் பிரகாஷ் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்று 200 ஏழைகளுக்கு போா்வை, புடவை மற்றும் இனிப்புகள் வழங்கி பேசினாா். சிஎஸ்ஐ சபை குரு தங்கத்துரை, பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜான் சைமன், பேரூராட்சி துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT