கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகேயுள்ள புத்தா்மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள புத்தா் கோயிலில் புத்த பெளணா்மி திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தமிழ்நாடு அரசின் சிறுபான்மை ஆணைக்குழு மாவட்ட உறுப்பினா் போதிசந்திரன் தலைமை வகித்தாா். இதில் புத்தரின் போதனைகளான புலால் வெறுத்தல், உண்மைநெறி ஆளுதல், கோபம் தவிா்த்தல், அன்பு செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. நாகை மாவட்ட பவுத்த சங்க செயலாளா் புத்தா ராஜேந்திரன், விவசாய சங்க செயலாளா் ராமச்சந்திரன், பொருளாளா் கவுதமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.