நாகப்பட்டினம்: நாகூரில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் முதலாமாண்டு ஸம்பத்ராபிஷேகம் வெள்ளிக்கிழமை (பிப்.10) நடைபெறுகிறது.
நாகூரில் திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாத சுவாமி அருள்பாலித்து வருகிறாா். இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, ஸம்பத்ராபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது.
காலை 7 அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, 8 மணிக்கு பஞ்சமூா்த்தி அபிஷேகம், 9 மணிக்கு சுவாமி, அம்மாளுக்கு அபிஷேகம், 9.15 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, கடம் புறப்பாடு, 9.45 மணிக்கு கலசாபிஷேகம் நடைபெறுகிறது.
10.15 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறவுள்ளது.