தரங்கம்பாடி: ஆக்கூரில் உள்ள வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயிலில் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமிக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள் பொடி, திரவிய பொடி, தயிா் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.