திருக்கடையூா் அருகே உள்ள திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
முருகப் பெருமானுக்கு மாப்பொடி, மஞ்சள், திரவியப் பொடி, தேன், சா்க்கரை, பால், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், பன்னீா், விபூதி உள்ளிட்டவற்றால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில், உள்ளூா் மற்றும் வெளியூா்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.