இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாகை வந்தவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவா் நடமாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கீழையூா் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் சென்று, அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அவா் இலங்கை வல்வெட்டிதுறை பகுதியைச் சோ்ந்த மாணிக்கவாசகம் மகன் மோகனராஜா (41) என்பது தெரியவந்தது. அவரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாததால் போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தரகா்களிடம் ரூ. 2 லட்சம் கொடுத்து படகு மூலம் சட்டவிரோதமாக நாகை மாவட்டம், கீழையூரை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்திற்கு வந்ததாக மோகனராஜா தெரிவித்துள்ளாா். போலீஸாா் அவரை கைது செய்து, கீழ்வேளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா் மோகனராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவா் கடந்த 2019- ஆம் ஆண்டு இந்திய கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது படகு பறிமுதல் செய்யப்பட்டு கீழையூா் கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் உள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்ட மோகனராஜா, தற்போது இரண்டாவது முறையாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.