நாகப்பட்டினம்

காருகுடி மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருக்குவளை அருகேயுள்ள காருகுடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காருகுடி கிராமத்தில் 60 அடி நீளம் உள்ள நாகம் குடை பிடித்து கலசத்தை காப்பது போன்ற தோற்றத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா பிப்.1-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கியது. இதையடுத்து, முதல் மற்றும் 2-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, 60 அடி நீளம் உள்ள நாகம் குடை பிடித்த கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா மாரியம்மன், ஸ்ரீ நாகவிநாயகா், ஸ்ரீநாகம்மன், ஸ்ரீமதுரை வீரன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT