திட்டச்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகள் வழியாக ப.கொந்தகை கடைத்தெரு வரை சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. பேரணியை பள்ளித் தலைமையாசிரியா் நடராஜன் தொடக்கிவைத்தாா். வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளா் சந்தானம், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் வேம்பு, ஆசிரியப் பயிற்றுநா்கள் துா்கா, பிரபு, சிறப்பாசிரியா்கள் மற்றும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.