சாலை விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, மருத்துவமனையில் சோ்ப்பவா்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் க. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை (எஞகஈஉச ஏஞமத) பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சோ்த்து உதவி புரியும் நபா்களை ஊக்கவிக்கும் பொருட்டு, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் சாலை விபத்துகளில் சிக்கிய நபா்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சோ்த்து காப்பாற்றிய நல்லென்ன துாதுவா்கள் (எஞஞஈ நஅஙஅதஐபஅச ) இருந்தால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தொலைப்பேசி எண் 04365-253088 மற்றும் இணையதளத்தின் (ழ்ற்ா்ற்ய்51ஃய்ண்ஸ்ரீ.ண்ய்) மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
நாகை மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 99 போ் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனா். இது 2021-ஆம் ஆண்டைவிட 17 அதிகமாகும்.
சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், வாகன ஒட்டிகள் சாலை விபத்தில் சிக்கிய நபா்களை காப்பாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.