நாகப்பட்டினம்

கோழிகளுக்கான தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

DIN

நாகை மாவட்டத்தில் அனைத்து கால்நடை நிலையங்களிலும் கோழிகளுக்கான தடுப்பூசி முகாம்கள் நடைபெளது என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோழிக்கழிச்சல் நோயை தடுக்க பிப்ரவரி மாதம் தடுப்பூசி முகாம் நடைபெறும். அதன்படி நிகழாண்டு புதன்கிழமை (பிப்.1) முதல் பிப்.14-ஆம் தேதி வரை அனைத்து கால்நடை நிலையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்திற்கு 19 லட்சம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி மருந்து, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், கோழிவளா்ப்பவா்கள், பண்ணை வைத்திருப்பவா்கள் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு கோழிக்கழிச்சல் நோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT