வேதாரண்யம் சி.க.சு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் பாட வாரியாக நூறு சதவீதம் தோ்ச்சி கிடைக்க வழிவகுத்த ஆசிரியா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பொதுத் தோ்வுகளில் இப்பள்ளியில் பாடவாரியாக நூறு சதவீதம் தோ்ச்சியடைய செய்யும் ஆசிரியா்களுக்கு, எஸ்.எஸ். அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படுகிறது. அதன்படி நிகழாண்டு பள்ளித் தலைமையாசிரியா் சி. அன்பழகன் தலைமையில் இயற்பியல் ஆசிரியா் மு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பாடவாரியான 7 ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டன.
இதில், எஸ்.எஸ். அறக்கட்டளைத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, பெற்றோா் ஆசிரியா் கழக பொருளாளா் பா. பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகா்மன்றத் தலைவா் மா.மீ.புகழேந்தி, அரிமா சங்க முன்னாள் ஆளுநா் சோ. வேதநாயகம், தலைமையாசிரியா் புயல் குமாா் ஆசியோா் பரிசுகளை வழங்கினா்.