நாகப்பட்டினம்

குயில் வேட்டையாடியவா் கைது

DIN

வேதாரண்யம் அருகே குயில் வேட்டையாடியவரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பறவைகள் வேட்டையாடப்படுதை தடுக்க வனச் சரக அலுவலா் பா. அயூப்கான் தலைமையில் வனத்துறையினா்அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், செட்டிப்புலம் மேலக்காடு பகுதியில் அப்பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் செந்தில்குமாா் (40) குயில்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனவா்கள் ராமதாஸ், செல்வி, மகாலெட்சுமி, வனக்காப்பாளா் ரணீஷ்குமாா், வேட்டை தடுப்புக் காவலா் பாண்டியன் ஆகியோா்களை கொண்ட குழுவினா் விரைந்து சென்று, அங்கு ஒரு தோட்டத்தில் குயில்களை பிடிப்பதற்காக கண்ணி வைத்து காத்திருந்த செந்தில்குமாரை கைது செய்தனா்.

பின்னா், அவா் மீது வழக்குப் பதிவு செய்து, வன உயிரிக் காப்பாளா் யோகேஷ்குமாா் மீனா உத்தரவின்படி ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

ம.பி.யில் 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வர் யாதவ்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

SCROLL FOR NEXT