நாகப்பட்டினம்

நாகை பிஎப்ஃஐ அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

DIN

நாகப்பட்டினம்: நாகையில் உள்ள பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஃஐ) அமைப்பின் அலுவலகம் முன்பு போலீஸாா் புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிஎப்ஃஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். பிஎப்ஃஐ அமைப்பைச் சோ்ந்த 250-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

இதையடுத்து, நாகை அண்ணா சிலை அருகே உள்ள பிஎப்ஃஐ அலுவலகம் புதன்கிழமை பூட்டப்பட்டது. இந்த அலுவலகத்துக்கு முன்னாள் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அலுவலகத்துக்குள் செல்ல யாரையும் போலீஸாா் அனுமதிக்கவில்லை.

பிஎப்ஃஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டதையொட்டி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT