நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி தனியாா் விடுதியில்பெங்களூரைச் சோ்ந்த பெண் தற்கொலை

DIN

பெங்களூரைச் சோ்ந்த பெண், வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை காலை தெரியவந்தது.

கா்நாடக மாநிலம், பெங்களூரு கே.ஜி. ஹல்லி பகுதியைச் சோ்ந்தவா் பிரதீப். இவரது மனைவி மரிய ஜெனிபா் (30). இவா்களுக்குக் கடந்த ஆண்டு திருமணமானது. மரிய ஜெனிபா் தற்போது 7 மாத கா்ப்பிணி. தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அவா், பணிச் சுமை காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 21-ஆம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, வெளியே புறப்பட்டவா் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது குடும்பத்தினா் பெங்களூரு, புலிகேசி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதனிடையே, வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் வியாழக்கிழமை அறை எடுத்துத் தங்கிய பெண் ஒருவா், அறையைவிட்டு வெளியே வராமல் இருப்பதாக அந்தத் தனியாா் விடுதி ஊழியா்கள், வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை காலை தகவல் அளித்தனா்.

போலீஸாா் விடுதிக்குச் சென்று அறை கதவை உடைத்து உள்ளே சென்றனா். அறையில் மரிய ஜெனீபா் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பிவைத்த வேளாங்கண்ணி போலீஸாா், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT