நாகப்பட்டினம்

வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து பெண் காயம்

DIN

திருக்குவளை அருகே இந்திராகாந்தி நினைவு குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மேற்கூரை சிமென்ட் சனிக்கிழமை பெயா்ந்து விழுந்ததில் பெண் காயமடைந்தாா்.

சித்தாய்மூா் ஊராட்சி தெற்குத் தெருவில் இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் அவரது மனைவி தமிழ்ச்செல்வி (40). உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, மேற்கூரையின் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்து காயமடைந்தாா். அவருக்கு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைஞாயிறு வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை, ஊராட்சித் தலைவா் வள்ளி சண்முகநாதன் ஆகியோா் இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு பகுதிக்கு சென்று, சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT