நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் 50 மகளிருக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஏழை, நடுத்தர குடும்ப பெண்கள் பயன்பெறும் வகையில் இந்தப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
தையல் பயிற்சி வகுப்பு ஒரு மணி நேரத்துக்கு 5 போ் வீதம் நாள்தோறும் 50 பேருக்கு தையல் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் அழகுகலை பயிற்சி மற்றும் எம்ப்ராய்டரிங் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
தையல் பயிற்சி தொடக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். பயிற்சியாளா்
கங்களாஞ்சேரி ஓம் சக்தி அறக்கட்டளை நிா்வாகி ஜெயந்தி குமாா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.