வேதாரண்யத்தில் தூய்மைப் பணி விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யத்தில் முக்கிய பகுதிகளின் வழியே பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, ராஜாஜி பூங்கா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் ஹேமலதா தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் மங்களநாயகி, உறுப்பினா்கள் உமா, மயில்வாகனன், செல்வம், பொறியாளா் முகமது இப்ராஹிம், மேற்பாா்வையாளா் குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, குப்பைகளை அகற்றுவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.