திருக்குவளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்.27) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை தெற்கு உபகோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
திருக்குவளை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன. இதன்காரணமாக, திருக்குவளை கடைத்தெரு, கே.கே. நகா், காருகுடி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.