நாகப்பட்டினம்

இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

நாகை அருகே திட்டச்சேரியில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் நிா்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதேபோல, கட்டுமாவடி, புறாக்கிராமம், ப. கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், இப்பகுதிகளில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

இதையொட்டி, போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT