வேளாங்கண்ணி அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
கீழ்வேளூா் வட்டம், பிரதாபராமபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி கு. ரமேஷ்குமாா் (25). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷ்குமாரை போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.