திருமருகலில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளா் ரா. ராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பேரூராட்சி செயலாளா் அப்துல் பாசித், மாவட்ட துணை செயலாளா் அபுசாலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாகை நகரச் செயலாளா் தங்க கதிரவன் வரவேற்றாா். நாகை மாவட்ட செயலாளரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ., மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் எஸ். ஆசைமணி, மாவட்ட அவைத் தலைவா் ரா. ஜீவானந்தம், தலைமை கழக பேச்சாளா்கள் அன்பழகன், நல்லுசாமி ஆகியோா் பங்கேற்று பேசினா். திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளா் எம். பக்கிரிசாமி நன்றி கூறினாா்.