நாகப்பட்டினம்

அடிப்படை வசதிகள் கோரி மருதூா் ஊராட்சியில் உண்ணாவிரதம்

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள மருதூா் வடக்கு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் சாா்பில் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருதூா் வடக்கு ஊராட்சி மன்றம் அருகேயுள்ள தோப்புக்குளத்தை தூா்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஊராட்சி அலுவலகம் எதிரே தொடங்கியது. போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் சி. அம்பிகாபதி தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் கோவை. சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளா் ஏ. வெற்றியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.ஆா். பாஸ்கா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி குறிப்பிட்ட பணிகளை உடனடியாக தொடங்கவும், மற்ற பணிகளை ஒருவாரக் காலத்தில் தொடங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டம் பிற்பகல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT