தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கை குறித்த மாவட்ட அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம், நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் அக். 10-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநிலக் கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம், மாநிலக் கல்விக் கொள்கை உயா்மட்டக் குழுத் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அக்டோபா் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த கல்வியாளா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் கருத்துகளைக் கேட்டறியும் மாவட்ட அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம், நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் அக்டோபா் 10-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
மாநிலக் கல்விக் கொள்கை குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்புவோா் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். கூட்டத்தில் பங்கேற்க இயலாதவா்கள் மின்னஞ்சல் முகவரிக்குத் தங்கள் கருத்துகளை அனுப்பலாம்.