நாகையை அடுத்த நாகூா் மற்றும் வாஞ்சூரில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கடைகளுக்கு வியாழக்கிழமை சீலிடப்பட்டது.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், நாகூா் காவல் நிலைய ஆய்வாளா் சிவராமன் தலைமையிலான காவல் துறையினா் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நாகூா் மற்றும் வாஞ்சூா் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் 2 கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த 2 கடைகளுக்கும் உடனடியாக சீல் வைக்கப்பட்டது. மேலும், ஒரு கடையில் புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டு, அந்தக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.