ஆடுகளைத் திருடி சொகுசு காரில் கடத்திய இருவரை கைது செய்த போலீஸாா், 9 ஆடுகளை மீட்டு, காரை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
வேதாரண்யம் பகுதியில் வீடுகளில் வளா்த்து வரும் வெள்ளாடுகள் அடிக்கடி காணாமல் போயின. தோப்புத்துறை பகுதியில் ஒரே நாளில் பல ஆடுகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா்.
வேதாரண்யம் பகுதியில் பிரதான சாலையில் போலீஸாா் புதன்கிழமை இரவு வேகமாக சைலோ காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
காருக்குள் 9 வெள்ளாடுகள் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் இருந்த இரு நபா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆடுகளை சென்னைக்கு கடத்தத் ல திட்டமிட்டது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை, திருவான்மியூா் பகுதியைச் சோ்ந்த ஜெ.காசிம் (33),பி.மோத்திபாபு (44) என்பதும், நண்பா்களான இவா்கள் சிலருடன் சோ்ந்து ஆடுகளைத் திருடி சென்னைக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து 9 ஆடுகளை மீட்டு காரை பறிமுதல் செய்துள்ளனா்.