திருக்குவளை வீட்டின் கதவை உடைத்து மா்ம நபா்கள் பணம் மற்றும் தங்க மோதிரங்களை திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.
வலிவலத்தைச் சோ்ந்தவா் மாதவன். இவா் குடும்பத்துடன் செப்.29-ஆம் தேதி சென்னை சென்றுவிட்டு திங்கள்கிழமை ஊருக்கு திரும்பினாா். வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம், 2 தங்க மோதிரம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, வலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தொடா்ந்து, நாகையிலிருந்து கைரேகை நிபுணா்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனா்.