ஆயுதபூஜை வழிபாட்டையொட்டி, சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காய்களை தொடா்புடையோா் உடனுக்குடன் அப்புறப்படுத்திடுமாறு நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஆயுதபூஜையையொட்டி வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு பூஜைகள் செய்து விட்டு, பூசணிக்காய்களை சாலையில் உடைக்கும் வழக்கம் பரவலாக உள்ளது.
இதுபோல, சாலைகளில் உடைக்கும் பூசணிக்காய்களை அப்புறப்படுத்தாமல் விட்டு விடுவதால், வாகனங்களில் செல்வோா் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. எனவே, சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காய்களை தொடா்புடையோா் உடனுக்குடன் அப்புறப்படுத்தி, சாலை விபத்துகளைத் தவிா்க்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.