நாகப்பட்டினம்

தொடா் விடுமுறை

DIN

கல்வி நிறுவனங்களுக்கான தொடா் விடுமுறை காரணமாக, வேளாங்கண்ணி சுற்றுலாப் பயணிகளின் வருகையால் களைகட்டி வருகிறது.

நாகையை அடுத்துளள்ள வேளாங்கண்ணி, உலகப் புகழ் பெற்ற கிறிஸ்தவ ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகவும், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் வழிபாடு மேற்கொள்ளவும், வேளாங்கண்ணி கடலில் நீராடி, கடல் உணவுகளை உண்டு மகிழவும் சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணிக்கு வருவது வழக்கம்.

தற்போது, பள்ளிகளுக்கு காலாண்டுத் தோ்வு மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி அக்டோபா் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரு நாள்களாக கணிசமாக அதிகரித்து வருகிறது. ஏறத்தாழ அனைத்து விடுதிகளும் ஏற்கெனவே சுற்றுலாப் பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

வார விடுமுறையுடன், பள்ளிகளுக்கான சிறப்பு விடுமுறையும் இணைந்த ஞாயிற்றுக்கிழமையன்று வேளாங்கண்ணிக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் வந்திருந்தனா். கடைவீதி, கடற்கரை, பேராலயம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என வேளாங்கண்ணியின் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் களைகட்டியிருந்தது.

மெழுகுவா்த்தி விற்பனை கடைகள், மீன் உணவு விற்பனை கடைகள், பூக்கடைகள் என அனைத்துக் கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. கடற்கரை பகுதியில், குழந்தைகளை ஈா்க்கும் வகையில் சறுக்குமரம், துப்பாக்கிச் சுடும் இடம், ராட்டினம் என பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT