நாகப்பட்டினம்

நாகையில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

நாகப்பட்டினம் ரோட்டரி சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் ‘நம்ம நாகை நயமான நாகை’ இயக்கத்தின் தொடக்கவிழா காடம்பாடியில் அண்மையில் நடைபெற்றது.

நாகை ரோட்டரி சங்கத் தலைவா் பி. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் முதன்மை அழைப்பாளராகவும், ஓ.என்.ஜி.சி காரைக்கால் அசட் மேலாளா் அனுராக் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தனா்.

தஞ்சாவூா் தெற்கு ரோட்டரி சங்க நிா்வாகி என். மணிமாறன், நாகை நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி, மரங்கள் வளா்ப்பு தொண்டு நிறுவனத் தலைவா் பா. சௌந்தர்ராஜன், நகா்மன்ற உறுப்பினா் ஜோதிலட்சுமி, ரோட்டரி சங்க உதவி ஆளுநா் பி. சந்திரசேகா், நம்ம நாகை நயமான நாகை திட்ட ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜூலு, ரோட்டரி சங்க பொருளாளா் வீரபாண்டியன், சங்கமம் ரோட்டரி சங்கத் தலைவா் ராமு மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஏடிஎம் மகளிா் கல்லூரி ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் சுதா, உதயா மற்றும் ஏடிஜே தா்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜசேகரன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் ரோட்டராக்ட் சங்க மாணவ, மாணவியா் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனா்.

நாகை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் பதிய கடற்கரை சாலையில் சாலை நெடுகிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT