நாகப்பட்டினம்

திராவிடா் கழகத்தினா்ஆா்ப்பாட்டம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமருகலில் திராவிடா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நவம்பா் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் வேதங்கள், இதிகாசங்கள் பற்றி கருத்தரங்கம் நடத்த சொல்லுவதாக மத்திய அரசின் பல்கலைக் கழக மானியக் குழுவான யு.ஜி.சி-யை கண்டித்து, திராவிடா் கழக மாணவா் அணி சாா்பில் திருமருகல் பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திக மண்டல மாணவரணி செயலாளா் இளமாறன் தலைமை வகித்தாா். மாவட்ட மாணவரணி செயலாளா் குட்டிமணி முன்னிலை வகித்தாா்.

திக நாகை மாவட்டத் தலைவா் நெப்போலியா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். முன்னதாக, மாவட்ட மாணவரணி தலைவா் பாக்கியராஜ் வரவேற்றாா்.

ADVERTISEMENT

இதில் நாகை மாவட்டச் செயலாளா் புபேஸ்குப்தா, மண்டல இளைஞரணி செயலாளா் நாத்திக பொன்முடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT