நாகூரில் படகு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மீனவா் மாயமானாா்.
தூத்துக்குடி கிரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அ. தேசய்யா (50). இவா், நாகூா் பட்டினச்சேரியில் சொந்தமாக மீன்பிடி படகு வைத்து தொழில் செய்து வருகிறாா். தூத்துக்குடி தாலமுத்து நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த மீனவா் க. பேச்சிமுத்து (26) தேசய்யாவிடம் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 20- ஆம் தேதி படகை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட பேச்சிமுத்துவை காணவில்லையாம். இதுகுறித்து, தேசய்யா அளித்தப் புகாரின் பேரில், நாகூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, பேச்சிமுத்துவை தேடிவருகின்றனா்.