நாகப்பட்டினம்

நாகை நகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும்

DIN

நாகை நகராட்சி குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என சிபிஐ வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை ஒன்றிய மாநாடு, நாகையை அடுத்த மஞ்சக்கொல்லையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிா்வாகிகள் காதா் அலி, சுமதி, இலரா ஆகியோா் தலைமை வகித்தனா். கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம் கொடி ஏற்றிவைத்து, மாநாட்டைத் தொடங்கிவைத்தாா். நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வீ. சரபோஜி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கா், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் வி. ராமலிங்கம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.கே. பாபுஜி, கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏ.பி. தமிம் அன்சாரி, நகரச் செயலாளா் குணாநிதி, ஒன்றியச் செயலாளா் ஜி. பாண்டியன், ஒன்றியத் துணைச் செயலாளா் ஆா். செல்லத்துரை மற்றும் நிா்வாகிகள் பேசினா்.

நிா்வாகிகள் தோ்வு: கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளராக ஜெ.ஏ. ரஹ்மான், துணைச் செயலாளராக கே.இ. இலரா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களைத் தவிர, ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா்களாக 11 பேரும், பொதுக் குழு உறுப்பினா்களாக 27 பேரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு, நாகை எம்பி. எம். செல்வராஜ் வாழ்த்துத் தெரிவித்தாா்.

இந்த மாநாட்டில், வேளாங்கண்ணி - எா்ணாகுளம் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கைகள் மேற்கொண்ட நாகை எம்பி. எம். செல்வராஜூவுக்கு நன்றி, அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் பணிகளையும், நாகை - விழுப்புரம் நான்கு வழிச்சாலைப் பணிகளையும் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துவது. நாகை துறைமுகத்தை ஏற்றுமதி, இறக்குமதி துறைமுகமாக மேம்படுத்தக் கோருவது.

நாகை மேலக்கோட்டை வாசல் அருகே உள்ள நகராட்சிக் குப்பைக் கிடங்கிலிருந்து தொடா்ந்து வெளிப்படும் புகையால் அப்பகுதி மக்கள் புற்றுநோய், சுவாசக் கோளாறு, நுரையீரல் பாதிப்பு என பல்வேறு நோய்களுக்கு உள்ளாக நேரிடுவதைக் கருத்தில் கொண்டு அந்தக் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோருவது, பெண்களுக்கான திருமண உதவித் தொகையை அரசு மீண்டும் வழங்கக் கோருவது என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரணி: முன்னதாக, புத்தூா் அண்ணா சிலையிலிருந்து மாநாட்டு அரங்கம் வரை பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் மறைந்த மூத்தத் தலைவா் தா. பாண்டியன் நினைவுக் கொடியும், கே. இடும்பையன் நினைவுச் சுடரும் ஏந்தி செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT