நாகை, மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம் சாா்பில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, அகிம்சை மற்றும் சகிப்புத் தன்மையில் முழுமையான நம்பிக்கைக் கொண்டு கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழுமையாக எதிா்க்க உறுதி ஏற்போம் என்ற உறுதிமொழி வாசகங்களைப் படித்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராமன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.