நாகப்பட்டினம்

திட்டச்சேரி பேரூராட்சி கூட்டம்: வரி உயா்வுக்குஎதிா்ப்பு தெரிவித்து 3 உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

திட்டச்சேரி பேரூராட்சி கூட்டத்தில் வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உறுப்பினா்கள் 3 போ் வெளிநடப்பு செய்தனா்.

திட்டச்சேரி பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரி உயா்வை இறுதி செய்வது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது, மனிதநேய ஜனநாயக கட்சியைச் சோ்ந்த பேரூராட்சி உறுப்பினா் செய்யது ரியாசுதீன், 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி உயா்வு என்பது மக்களை பெரிதும் பாதிக்கும். அரசு இந்த வரி உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரி உயா்வு தொடா்பாக பொதுமக்களின் கருத்துகளை அறிய போதிய கால அவகாசம் வழங்கவேண்டும் என வலியுறுத்தினாா்.

தொடா்ந்து, வரி உயா்வு தீா்மானத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து சுயேச்சை உறுப்பினா் ஷேக்அப்துல் பாசித், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினா் செய்யது ரியாசுதீன், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினா் சுல்தான் ரிதாவுதீன் ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT