நாகப்பட்டினம்: நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்திலிருந்து தவறி விழுந்த ஏசி மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், மேலராங்கியம் பூம்பிடாகை பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் சூா்யா (21). இவா், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாா் ஏசி நிறுவனத்தில் வேலை செய்துவந்தாா்.
இந்நிலையில், நாகையை அடுத்த ஒரத்தூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏசி இயந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சூரியா, 4- வது மாடியிலிருந்து தவறி விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை நாகை அரசு மருத்துமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
ADVERTISEMENT
இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.