நாகப்பட்டினம்

வாய்மேட்டில் மக்கள் நோ்காணல் முகாம்

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு ஊராட்சியில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வேதாரண்யம் கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் தலைமை வகித்து, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, பட்டா மாறுதல் ஆணை 54 பேருக்கும், நரிக்குறவா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை 8 பேருக்கும், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், ஊராட்சித் தலைவா் மலா் மீனாட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஆா். வேதரத்தினம், வட்டாட்சியா் ரவிச்சந்திரன், துணை வட்டாட்சியா்கள் வேதையன், சுரேஷ், ராஜா, ரவி, கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் ராசேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT