வேதாரண்யம் பகுதி கடல் பரப்பு வழியே அன்னியா்கள் ஊடுருவலை தடுக்கும் சாகா் கவாச் ஒத்திகை கண்காணிப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம், ஆறுகாட்டுதுறையில் மீன்பிடி படகுகளில் பயணித்த போலீஸாா் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனா். துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகவேல், கடலோரக் காவல் குழும துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் ஆகியோா் தலைமையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதியிலும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.