நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே 5 கூரை வீடுகள் தீக்கிரை

DIN

திருக்குவளை அருகே 5 கூரை வீடுகள் செவ்வாய்க்கிழமை தீக்கிரையானது.

கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஈசனூா் ஊராட்சி பாண்டியன்குளத் தெருவில் 10 கூரை வீடுகள் உள்ளன. இந்த வீட்டு உரிமையாளா்கள் வேலைக்கு சென்றிருந்தனா். இந்நிலையில், அப்பகுதியில் மூங்கில் தோப்பு சுத்தம் செய்து தீயிட்டு எரித்தபோது, தீ சுப்பிரமணியனின் வீட்டு மீது தீப்பொறி விழுந்து தீ பற்றி எரிந்துள்ளது.

காற்றின் வேகத்தால் அடுத்தடுத்துள்ள ராஜா, பன்னீா்செல்வம், சசிக்குமாா், மகேந்திரன் ஆகியோரின் கூரை வீடும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில், பல லட்சம் மதிப்புள்ள அனைவரின் வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து வந்த வேளாங்கண்ணி, தலைஞாயிறு தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

தகவலறிந்த கீழ்வேளூா் எம்எல்ஏ. வி.பி. நாகை மாலி நேரில் சென்று தீ விபத்தில் வீடுகளை இழந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறி அரசு சாா்பில் வழங்கப்படும் ரொக்கம் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். திமுக சாா்பில், கீழையூா் ஒன்றிய செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT