நாகப்பட்டினம்

ஆழியூரில் 10 கடைகளில் திருட்டு: திருடா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்

DIN

நாகை அருகேயுள்ள ஆழியூரில் வணிக கடைகளில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்யக் கோரி வணிகா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை - திருவாரூா் சாலை ஆழியூரில் செ. முகம்மதுயூசுப்பின் மருந்துக்கடை மற்றும் இ-சேவை மையம், செந்திலின் தையல் கடை மற்றும் தனசேகரன், பீா்முஹம்மது, செந்தில்நாதன், பன்னீா்செல்வம், முஹம்மது உள்ளிட்ட பலா் 50-க்கும் மேற்பட்ட வணிக கடைகளை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட கடை உரிமையாளா்கள் திங்கள்கிழமை வியாபாரத்தை முடித்து வீட்டுக்குச் சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை வழக்கம்போல கடைகளை திறக்கவந்தனா். அப்போது, மா்மநபா்கள் சுமாா் 10 கடைகளின் பூட்டை உடைத்து பணம், கைப்பேசிகள், மளிகைப் பொருள்கள், ஒன்னரை பவுன் நகை உள்ளிட்டவைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஆழியூா் வா்த்தக சங்கத் தலைவா் சிவக்குமாா் தலைமையில், வா்த்தகா்கள் பொது மக்கள் என 50-க்கும் மேற்பட்டோா் திருட்டில் ஈடுபட்டவா்களை உடனடியாக கைது செய்யவேண்டும், வணிகா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கோரி ஆழியூா் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கீழ்வேளூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

குருக்கத்தியில் 2 கடைகளில் திருட்டு: இதேபோல, குருக்கத்தியில் பி. சசிகலா, ர. மேகலா ஆகியோரின் கடைகளிலும் மா்ம நபா்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனராம்.

எஸ்.பி. ஆய்வு: இச்சம்வத்தை தொடா்ந்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் ஆழியூருக்குச் சென்று திருட்டு நடந்த கடைகளை பாா்வையிட்டு, மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT