நாகப்பட்டினம்

தொழில்முனைவோருக்கான இலவச திறன் வளா்ப்பு பயிற்சி முகாம்

DIN

நாகையில் தொழில்முனைவோா்களுக்கான இலவச திறன்வளா்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகின்றன.

தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், தொழில் முனைவோருக்கு நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீன்வளப் பொறியியல் கல்லூரி சாா்பில், நாகை கீச்சாங்குப்பம் மெட்ரோ மீன் பதனக் கூடத்தில் திங்கள்கிழமை (ஜூன் 27) தொடங்கி ஜூன் 28,29 ஆகிய 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொழில்முனைவோா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தி, அவா்கள் சுயத்தொழில்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் காணும் வகையில், மதிப்புக்கூட்டுதல் மூலம் புதுமையான மீன் உணவுப் பொருள்கள் தயாரிப்பது குறித்து முகாமில் இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறது.

இதில், பங்கேற்க விரும்புவோா் பயிற்சி ஒருங்கிணைப்பாளா்களை 9994358736, 98413 43032 ஆகிய கைப்பேசி எண்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) மாலை 5 மணிக்குள் தொடா்புகொண்டு பதிவு செய்துகொள்ளுமாறு பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ப. காா்த்திக்குமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT